08/11/2022
வாழ்க வளமுடன் .
அன்பானவர்களுக்கு வணக்கம்..
Art is Long ; Life is short -
கலை காலங்கள் தாண்டி தலைமுறைகள் தாண்டி நிற்கும்.
கலை நயமான பொருட்களை பெறுவதும் மற்றவர்களுக்கு அளிப்பதும் நம் சிந்தனையை, மனச் சூழலை நேர்மறை எண்ணங்களை வலுப்படுத்தும்.
யானையையும் ரயிலையும் எத்தனை முறை பார்த்தாலும் அதன் ஆச்சரியங்கள் நம்மை விழி விரிய செய்கின்றன.
அதுபோல நம்மிடம் உள்ள கலைநயமிக்க பொருட்கள் எத்தனை முறை கவனித்தாலும் நம் மனதுக்கு இதமளிக்கின்றன.
"Handicraft is Heartmade".
கைவினைப் பொருட்கள் என்பது ஓர் உருவத்தை மனதில் உருவகப்படுத்தி அறிவால் கற்பனை செய்து கைகளால் வர்ணிக்கப்பட்டு நம்மை வந்தடைகின்றது.
உங்கள் ரசனைகளை மேம்படுத்த,
உங்கள் இல்லங்களிலும் அலுவலங்களிலும் கலை பொருட்கள் அலங்கரிக்க ,
நீங்கள் வழிபடும் பூஜை அறையில் தெய்வீகமான கடவுள் சிலைகள் அமைய ,
நீங்கள் உங்கள் அன்பானவர்களுக்கு வழங்கும் அன்பளிப்புகள்,பரிசுப் பொருட்கள் காலம் தாண்டி நிலைத்து நிற்க...
தேனீக்கள் பல மலர்களில் இருந்து தேனெடுத்து நமக்கு அருமருந்தாக வழங்குவதை போல பல இடங்களிலிருந்து பித்தளை சிலைகள்,விளக்குகள், கடவுள் சிலைகள், பளிங்கு சிற்பங்கள்,சுவர் அலங்காரங்கள் மர கைவினைப் பொருட்கள் அனைத்தையம் தேடி வரவழைத்து ஓர் இடத்தில குவித்து
" kalashethraa "
என்று பெயரிட்டுள்ளோம் .
கலாசேத்ரா என்றால் கலைகளின் கிராமம் என்று பொருள்.
உங்கள் கலை தேவையை, ரசனையை நிறைவேற்றிக்கொள்ள,
எங்களை அணுக
இதையே அழைப்பூபூ ...இதழாகக் கொண்டு நாங்கள் வளர உங்கள் வாழ்த்துகளுக்காக கரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்.
எங்களை அழைக்க 90 433 900 14.