21/02/2024
#தீட்டுள்ள_பெண்கள்
தொழில்நுட்பம் பெருகாத ஆதி காலத்தில் உடல் வலுவாக இருந்த காரணத்தாலேயே ஆணின் ஆதிக்கம் ஓங்கி இருந்தது. ஆனாலும் பெண் அவனை விட நுட்பமானவளாக இருந்தாள். ஆணை தன் அழகால் அலை கழித்தாள், ஒவ்வொரு கணமும் தன் எண்ணத்தை பெண் ஆக்கிரமிப்பதை ஆண் கவனித்தான். உடல் ரீதியாக பலம் கொண்டவனாக இருந்த போதிலும், மனரீதியாக பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப் படைத்தது. அதனாலேயே பெண்களை அடக்கி வைக்க அவன் முற்பட்டான்...!
எங்கே சற்று சுதந்திரம் கொடுத்தால், அதிகாரத்தை பெண் எடுத்துக் கொள்வாளோ என்று அரசர்கள் மட்டுமல்ல மதகுருமார்களும் கலங்கினார்கள். ஆண்களே வாரிசாக வேண்டும் என்ற விதி, ஆட்சிகளை விட்டுக் கொடுக்காமல் இருக்க அடிக்கோலியது.
மதகுருமார்களும் பெண்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அதில் ஒன்றுதான் இந்த #தீட்டு... மாதம் ஒருமுறை பெண் அசுத்தமாகிறாள் என்று சொல்பவர்களிடம் இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.........................
நீங்கள் வசதியாக ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறீர்கள், நீங்கள் உங்கள் அன்னையின் கருவில் இருந்த 10 மாதங்களும் அவளுடைய அசுத்தங்கள் வெளியேறவில்லை, அப்படியானால்,
அந்த அசுத்தங்களால் தானே நீங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டீர்கள்? உங்கள் உடலின் ஒவ்வொரு துளி ரத்தமும், நரம்பும், தசையும், எலும்பும் அந்த அசுத்தால்தானே தயாராகி இருக்க முடியும்?
ஒரு பெண்ணை அசுத்தம் என்றால் அவளிடம் இருந்து உருவானவர்கள் அவளைக் காட்டிலும் அசுத்தமானவர்களாக தானே இருக்க முடியும்??? அவளுக்கு மாதம் ஒருமுறை தீட்டு என்றால், உங்களுக்கு தினம் தினம் தீட்டு தானே??? எனவே இந்த நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு பெண்களை
இழிவு படுத்த முனையாதீர்கள்
(மூன்றாவது கோணம் தொகுப்பிலிருந்து)